×

8 பேரின் குடும்பத்தினருடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: கத்தாரில் மரண தண்டனை

புதுடெல்லி: கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர்களது குடும்பத்தினரை வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசினார். கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படையை சேர்ந்த 8 பேர் உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த 8 பேருக்கும் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்நிலையில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தண்டனை பெற்ற இந்தியர்களின் குடும்பங்களை நேற்று நேரில் சந்தித்து பேசினார். 8 பேரையும் விடுப்பதற்கு தேவையான சட்டரீதியான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

The post 8 பேரின் குடும்பத்தினருடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: கத்தாரில் மரண தண்டனை appeared first on Dinakaran.

Tags : Minister ,Jaisankar ,Qatar ,New Delhi ,Foreign Minister ,Jaisangar ,Indians ,Dinakaran ,
× RELATED மாஜி அரியானா முதல்வர் கட்டார் வேட்புமனுதாக்கல்